Monday, September 1, 2014

M.G.R's Aayirathil Oruvan Re-Release "175 days" Function



     " ஆயிரத்தில் ஒருவன் " வெள்ளி  விழா !     

 சென்னையில் கோலாகல ஏற்பாடு !






1965ம் ஆண்டில்,  புரட்சி தலைவர்  எம்.ஜி. ஆர் - புரட்சி தலைவி ஜெயலலிதா   நடித்து   "ஆயிரத்தில்
ஒருவன்" வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றி பெற்றது.
இத்திரைப்படம் அன்று முதல் தமிழகமெங்கும் சுமார் 3000க்கும் மேற்பட்ட
திரையரங்குகளில் இடைவெளியின்றி  தொடர்ந்து திரையிடப்பட்ட வண்ணம் உள்ளது.




இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி,  புதிய நவீன தொழில் நுட்ப
(டிஜிட்டல்) முறையில் முதன் முறையாக தமிழகமெங்கும்
சுமார் 160க்கும் மேற்பட்ட திறையரங்குகளில் ஒரே நேரத்தில்
திரையிடப்பட்டு, சென்னையில் வெற்றிகரமாக சத்யம் வளாக அரங்கம்  மற்றும்
ஆல்பர்ட் வளாக அரங்குகளில் 24  வாரங்களை கடந்து தற்போது வெள்ளி விழாவை
நெருங்கிக் கொண்டிருக்கிறது.




மறு வெளியீட்டில், வெள்ளி விழா காணும் முதல் திரைப்படம் என்ற பெருமையை
"ஆயிரத்தில் ஒருவன்"  பெறுகிறது.


 





இதனை முன்னிட்டு,  01-09-2014 அன்று பகல் 3.00  மணியளவில் சென்னை
காமராஜர் அரங்கில், அனைத்து எம். ஜி. ஆர். ரசிகர்களின் சார்பில்,  லஷ்மன்
ஸ்ருதி  இசை மழையுடன், மிகப்பெரிய வெற்றி விழா  நடைபெற உள்ளது.




இதற்கான ஏற்பாடுகளை  ஒலிக்கிறது உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி. எஸ்.
ராஜு மற்றும் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில்,
எம்.ஜி. சி. பிரதீப், எஸ். ராஜ்குமார்,  கே. ஈ பாஸ்கரன்,  சௌ.செல்வகுமார், ஏ. ஹயாத், கே.பாபு,  ஆர். இளங்கோவன்,  எம். எஸ். மணியம், ஆர். லோகநாதன், கே. எஸ். மணி




!!அனைவரும் வருக வருக!! 



                                                    (தொடரும்...... )


Related Posts Plugin for WordPress, Blogger...